அருங்கரை அம்மனை வழிபடும் பண்ணை குலத்தினர் கரூர் வட்டாரத்தில் கூடலூர், கைலாசபுரம், ஊத்துக்கரைப்பாளையம் ஊர்களில் அதிகமாகவும், மற்ற ஊர்களில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
நாமக்கல் கீரம்பூர் எட்டுக்கை அம்மனை வழிபடும் பண்ணை குலத்தினர் கரூர் வங்கப்பாளையம், நெடுங்கூர் , நெரூர், நமக்கல், ராசிபுரம், வீரராக்கியம், ஆகிய ஊர்களில் அதிகமாகவும், மற்ற ஊர்களில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
கொங்கு வரலாற்றை கூறும் இக்கொங்கு மண்டல சதகத்தை வாலசுந்தரக் கவிஞர் இயற்ற அவருக்கு உறுதுனையாக இருந்தவர்கள் பண்ணை குலத்தார் ஆவர்.இதனால், பாயிரத்தில் " படிக்கவே பொருட் சாத்தந்தைப் பண்ணை கோன் வெண்ணை நல்லூர் கொடுத்திரு மிரணம் வாரிக் கொங்கு செய் சததந்தானே " என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளர்.
இவ்வாறே கம்பர் ராமாயணம் பாடுவதற்க்கு உறுதுணையாய் இருந்து ஊக்குவித்தவர் பண்ணை குல வேளாளர் சடையப்ப வள்ளல் என்றும் , கம்பராமாயணம் முடி சூட்டுப் படலத்தில் இராமனுக்கு முடிசூட்டும் போது கிரீடத்தை பண்ணை குல வேளளர் மரபினோர் எடுத்து கொடுக்க வஷிஷ்டன் அணிவித்தான் என்றும் கம்பர் கூறுகிறார்.
No comments:
Post a Comment