Friday, May 7, 2010

எட்டுக்கை அம்மன் - சிறப்பு


எட்டுக்கை அம்மன்னின் சிறப்பு

எட்டுக்கை அம்மன் எனும் சிறப்பு கரங்களினாலேயே காரண பெயர் பெற்று விளங்குகிறது. இது அன்னையின் திருக்கோலம். பராசக்தியின் பல்வேறு வடிவங்களில் கொற்றவை எனும் காளி, துர்க்கை, போன்ற தெய்வங்கள் வட திசையை நோக்கி குடி கொள்பவர்கள். இந்த வகையில் தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தும் தேவி வடிவங்களில் ஒன்றே அன்னை எட்டுக்கை அம்மன்.
இது போன்ற மற்ற தெய்வ வடிவங்களில் அமைய பெற்றிருக்கும் அசுரனின் வடிவம் அசுரனை காலால் மிதிப்பது போன்றும், அல்லது நீண்ட சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்வது போன்றும் அமைந்திருக்கும். ஆனால் , எட்டுக்கை அம்மனின் சிறப்பு அசுரனை அடியோடு சாய்த்து வெற்றி வாகை சூடி அருள் வழங்கும் காட்சியாக உள்ளது.
மேலும் சிவனில் இவள் பாதி என உணர்த்தும் வகையில் இடது கரத்தில் விஸ்மயா ஹஸ்த்தம் எனும் வியப்பினை ஓட்டும் முத்திரையில் அக்னி, வில், மணி, கபாலம் இவைகளையும் , வலது கரத்தில் டமருகம் ( உடுக்கை ), எறி சூலம், கட்கம் ( சிறிய கத்தி ), வேல், இவைகளையும் தனது எட்டு கரத்தில் தாங்கி அருள்பாலிக்கிறாள்.
அன்னையின் வலபுற காதில் மகர குண்டலமும், இடபுற காதில் பத்திர குண்டலமும் அணிந்துள்ளது ஆண், பெண், சரி பாதி என்ற தோற்றத்தை நினைவு கூர்கிறது.

ஜுவாலா கேசம் ( அக்னி கூந்தல் ) கொண்ட அன்னை காளி தேவியின் வடிவமே ஆயினும் பரமஹம்சர் தேவி அன்பின் வடிவமே என்கிறார்.

வீரத்தின் அடையாளமாக அன்னை உத்தங்குடிகா ஆசனம் இட்டு தனது வலது பாதத்தை பீடத்தின் மேலும், இடது பாதத்தை ஊன்றியும் அமைந்தவாறு வடிவமைத்துள்ளது சிற்ப்பியின் கலைத்திறனையும், சாஸ்த்திர ஙுனுக்கத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது.

PANNAI KULAM

பண்ணை குலம்

பண்ணை குலம் என்ற பெயர் பண்ணைக்கீரை வழியாக ஏற்பட்ட பெயராகும். காவிரி தென்கரை நாடான குளித்தலை வட்டாரத்தில் வாழ்ந்த பண்ணை குலத்தினர் உறையூர் சோழ மன்னரின் குடி மக்களாகவும், படை மக்களாகவும் சிறப்புடன் வாழ்ந்தனர். வால சுந்த்தர கவியின் கொங்கு மண்டல சாதகப்பாடல் ஒன்று 1051 ல் குளித்தலை வட்டாரம் ஆத்திய நல்லூரில் சாத்தந்தை குலத்தாரும் பண்ணை குலத்தாரும் சிறப்புடன் வாழ்ந்த தோரணையைக் குறித்துள்ளது.
அருங்கரை அம்மனை வழிபடும் பண்ணை குலத்தினர் கரூர் வட்டாரத்தில் கூடலூர், கைலாசபுரம், ஊத்துக்கரைப்பாளையம் ஊர்களில் அதிகமாகவும், மற்ற ஊர்களில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
நாமக்கல் கீரம்பூர் எட்டுக்கை அம்மனை வழிபடும் பண்ணை குலத்தினர் கரூர் வங்கப்பாளையம், நெடுங்கூர் , நெரூர், நமக்கல், ராசிபுரம், வீரராக்கியம், ஆகிய ஊர்களில் அதிகமாகவும், மற்ற ஊர்களில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
கொங்கு வரலாற்றை கூறும் இக்கொங்கு மண்டல சதகத்தை வாலசுந்தரக் கவிஞர் இயற்ற அவருக்கு உறுதுனையாக இருந்தவர்கள் பண்ணை குலத்தார் ஆவர்.இதனால், பாயிரத்தில் " படிக்கவே பொருட் சாத்தந்தைப் பண்ணை கோன் வெண்ணை நல்லூர் கொடுத்திரு மிரணம் வாரிக் கொங்கு செய் சததந்தானே " என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளர்.
இவ்வாறே கம்பர் ராமாயணம் பாடுவதற்க்கு உறுதுணையாய் இருந்து ஊக்குவித்தவர் பண்ணை குல வேளாளர் சடையப்ப வள்ளல் என்றும் , கம்பராமாயணம் முடி சூட்டுப் படலத்தில் இராமனுக்கு முடிசூட்டும் போது கிரீடத்தை பண்ணை குல வேளளர் மரபினோர் எடுத்து கொடுக்க வஷிஷ்டன் அணிவித்தான் என்றும் கம்பர் கூறுகிறார்.

THEERAN CHINNAMALAI

Maaveeran Dheeran Chinnamalai (TAMILமாவீரன் தீரன் சின்னமலை born as Theerthagiri Gounder on April 17, 1756) was a Kongu chieftain and Palayakkarar from Tamil Nadu who rose up in revolt against the British East India Company in the Kongu Nadu, Southern India. He was born in Melapalayam, near Erode in the South Indian state of Tamilnadu.

He was one of the main leaders in the Polygar Wars and commanded a vast army made up of Kongu youths, notably during the Second Polygar War that took place in 1801-1802. A thousand-strong Kongu army under him took French Military training in modern warfare alongside Tipu's Mysore forces to fight against the British East India company. They helped Tipu Sultan in his war against the British and were instrumental in victories at Chitheswaram, Mazahavalli and Srirangapatna. After Tipu's death, Chinnamalai settled down at Odanilai in Kongu Nadu and constructed a fort there and defeated the British in battles at Cauvery in 1801, Odanilai in 1802 and Arachalur in 1804. Later, Chinnamalai left his fort to avoid cannon attack and engaged in guerrilla warfare while he was stationed at Karumalai in the Palani region. He was betrayed by his cook and was captured by the British who hanged him at Sankagiri Fort on Adiperukku day.

KONGU VELLALAR

Kongu Vellala Gounders are one of the earliest inhabitants of South India living in the North Western part of Tamil Nadu with agriculture as their occupation. Among the many other meanings the word "Kongu" has, the most acceptable ones are "honey"

ABOUT KONGU

Kongu Nadu is a region comprising the north-western part of the Indian state of Tamil Nadu. The region is bounded on the west and north-west by the Indian state of Karnataka, on the west by the state of Kerala and the Tondai Nadu, Chola Nadu and Madurai regions of Tamil Nadu in the east, south-east and south respectively. The geographical extent of Kongu Nadu is roughly confined to the territories of the ancient Chera kingdom